ரோஹித் சர்மாவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!
Jan 02, 2024 30 views Posted By : YarlSri TV
ரோஹித் சர்மாவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!
இந்திய கிரிக்கெட்டில் தோனி மட்டுமே செய்த ஒரு அரிய 13 வருட சாதனையை கேப்டன் ரோஹித் சர்மா முறியடிக்க கடைசி வாய்ப்பு கிடைத்துள்ளது .
தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை. ஆனால், ஒரே ஒரு முறை சமன் செய்துள்ளது. 2010ஆம் ஆண்டு கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 1 என சமன் செய்து இருந்தது. தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணியின் அதிகபட்ச டெஸ்ட் தொடர் சாதனை அதுதான்.
தற்போது இந்திய அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ளது. இதில் முதல் போட்டியில் இந்தியா மோசமாக ஆடி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது
ஒருவேளை முதல் டெஸ்ட்டில் வென்று இருந்தால் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்திய அணி, தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கும். ஆனால், அந்த வாய்ப்பு நழுவிப் போனது. இனி தொடரை சமன் செய்யும் வாய்ப்பு மட்டுமே இந்திய அணிக்கு உள்ளது.
கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இந்திய வீரர்கள், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பயிற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை 1 - 1 என சமன் செய்யலாம். அதன் மூலம் 13 வருடத்திற்கு முன் தோனி செய்த அதே சாதனையை கேப்டன் ரோஹித் சர்மாவும் செய்ய முடியும்.
முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் மோசமாக அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்க்ஸில் டக் அவுட் ஆனார். எனவே, தனிப்பட்ட முறையில் ரோஹித் சர்மா தென்னாப்பிரிக்க மண்ணில் தனது மோசமான பேட்டிங் ஃபார்மை மாற்ற வேண்டிய நிலையிலும் இருக்கிறார்.
முதல் டெஸ்ட்டில் கே எல் ராகுல் முதல் இன்னிங்க்ஸில் சதம் அடித்ததும், விராட் கோலி இரண்டாவது இன்னிங்க்ஸில் அரைசதம் அடித்ததும் மட்டுமே இந்திய அணிக்கு ஆறுதலாக இருந்த விஷயம். இப்படிப்பட்ட நிலையில், இந்திய அணி இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெறுமா? என்ற சந்தேகமும் உள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago