Skip to main content

உணவுப் பொருட்களின் விலை நாளை முதல் அதிகரிக்கும்!

Dec 31, 2023 38 views Posted By : YarlSri TV
Image

உணவுப் பொருட்களின் விலை நாளை முதல் அதிகரிக்கும்! 

நாட்டில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .



அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.





18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி நாளை முதல் நடைமுறைக்கு வருவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



அதிகரிக்கும் விலை  

இதன்படி, பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாயினாலும், சாதாரண தேநீரின் விலை 5 ரூபாயினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



அத்துடன், கொத்துரொட்டி மற்றும் ப்ஃரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 25ரூபாயினாலும் சிற்றுண்டி உணவுகளின் விலை 10 ரூபாயினாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஹர்சன ருக்ஷான் மேலும்  தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பெறுமதி சேர் வரி அதிகரிப்பினால் பல்வேறு கட்டணங்களும் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை