தெமட்டகொட-பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கல் வீச்சு தாக்குதல்..!
Dec 29, 2023 29 views Posted By : YarlSri TV
தெமட்டகொட-பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கல் வீச்சு தாக்குதல்..!
பொலிஸ் சோதனை நடவடிக்கையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கல் வீச்சு தாக்குதல் சம்பவம் ஒன்று தெமட்டகொடவில் பதிவாகியுள்ளது.
தெமட்டகொட லக்ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்து (27) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கற்களை வீசித் தப்பிச் செல்ல முயன்ற பிரபல போதைப்பொருள் வியாபாரி உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டதாக தெமட்டகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டார தெரிவித்தார்.
காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் சமரஜீவ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சார்ஜன்டை காயப்படுத்திய போதைப்பொருள் வியாபாரியான மாளிகாவத்தே அசிதவிடம் இருந்து உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் 11,500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தெமட்டகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் 42 அதிகாரிகள் கொண்ட குழுவொன்று லக்ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
16 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
16 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
16 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago