கட்டுநாயக்க விமான சேவைகள் இன்றும் ரத்து!
Feb 28, 2024 17 views Posted By : YarlSri TV
கட்டுநாயக்க விமான சேவைகள் இன்றும் ரத்து!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணிக்கவிருந்த மூன்று விமான சேவைகள் இன்றும் ரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று காலை 7.25 அளவில் ஹைத்ராபாத் நோக்கி பயணிக்கவிருந்த யு.எல்.177 என்ற விமானமும், 8.55 அளவில் காத்மண்டு நோக்கி பயணிக்கவிருந்த யு.எல்.181 என்ற விமானமும் ரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, இன்று அதிகாலை கோலாலம்பூர் நோக்கி பயணித்த எம்.எச்.178 என்ற விமான சேவையும் ரத்து செய்யப்பட்டதாக வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளின் தாமதம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிர்வரும் சில நாட்களுக்குள் தீர்வு காண முடியும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
திட்டமிடப்பட்டிருந்த 7 விமான சேவைகள் நேற்றைய தினம் இரத்துச் செய்யப்பட்டதுடன், இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது
அந்த கலந்துரையாடலின் போது கருத்து முரண்பாடுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் எமது செய்தி சேவை, ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகேவிடம் வினவியது.
அதேநேரம், விமானங்கள் ரத்தாகியமையினால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கோருவதாக வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி தொழில்நுட்ப கோளாறு, விமானங்களுக்கான உதிரிப்பாகங்களுக்கான தட்டுப்பாடு மற்றும் சேவையாளர்களுக்கான பற்றாக்குறை என்பனவும் அவற்றில் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் .
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago