Skip to main content

இலங்கை-இந்தியா இடையே பயணிகள் போக்குவரத்து

Oct 06, 2023 31 views Posted By : YarlSri TV
Image

இலங்கை-இந்தியா இடையே பயணிகள் போக்குவரத்து 

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று (06) சோதனை முறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.



கடந்த நான்காம் திகதி கேரளாவின் கொச்சி துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி பயணமான கப்பல் நேற்று (05) நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடைந்து அங்கிருந்து இன்று (06) காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிய பயணிகள் கப்பல் போக்குவரத்து, சோதனை முறையினை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதனைத் தொடர்ந்து அனைத்து நிர்மாணப்பணிகளையும் நிறைவு செய்ததன் பின்னர் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் போக்குவரத்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

16 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

16 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

16 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை