பொலிசார் மீது தாக்குதல்
Sep 25, 2023 36 views Posted By : YarlSri TV
பொலிசார் மீது தாக்குதல்
கல்கிசையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(24) பிற்பகல் கல்கிசை கடலில் ஆபத்தான இடத்தில் சிலர் நீராடுவதாக கரையோர பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.
அதனையடுத்து, அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள், நீராடிக்கொண்டிருந்தவர்களை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அவ்வேளை குறித்த நபர்கள் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரத்மலானை, பிலியந்தலை, அஹுங்கல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago