Skip to main content

தமிழ் இளைஞன் ஒருவர் விமான நிலையத்தில் கைது

Sep 16, 2023 45 views Posted By : YarlSri TV
Image

தமிழ் இளைஞன் ஒருவர் விமான நிலையத்தில் கைது 

நாட்டை விட்டு  செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் குடிவரவு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.



இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதைத் தவிர்ப்பதற்காக சிங்கப்பூர் செல்வதாகக் கூறி அவர் வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளார்.



மன்னார் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



நேற்றையதினம் இரவு தாம் சிங்கப்பூருக்கு பயணம் செய்வதாகக் கூறிவிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் பிரவேசித்துள்ளார்.



இதன்போது ஓமன் நாட்டின் மஸ்கட் சென்று அங்கிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் வழியாக சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார். 



ஆனால் பின்னர் அவர் கட்டார் எயார்வேஸ் கவுண்டருக்கு சென்று தனது ஆவணங்களை ஒப்படைத்துள்ளார்.



அதைக் கவனித்த குடியேற்ற அதிகாரிகள் அவரை மீண்டும் அழைத்து விசாரித்தனர். 



அங்கு இந்த இளைஞன் தான் கட்டாரின் தோஹாவுக்கு வேலை நிமித்தமாக செல்வதாகவும், அதற்காக அந்நாடு வழங்கிய பணி விசாவும், கட்டார் விமான டிக்கெட்டும் உண்மைகளை உறுதி செய்யும் வகையில் ஒப்படைத்துள்ளார்.



எனினும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதைத் தவிர்ப்பதற்காக போலியான சிங்கப்பூர் வீசா மற்றும் ஓமான் விமானச் சேவை டிக்கெட்டை அவர் ஆரம்பத்தில் முன்வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை