கிறிஸ்துமஸ் விழா சென்னையில் மட்டும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!
Dec 23, 2023 39 views Posted By : YarlSri TV
கிறிஸ்துமஸ் விழா சென்னையில் மட்டும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் மட்டும் சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான டிசம்பர் 25-ம் தேதி, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை இரவும், மறுநாள் திங்கள்கிழமையும் கிறிஸ்துமஸ் விழா கொண்டப்பட உள்ளது. தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகளும், கூட்டுத்திருப்பலியும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், 'துணை ஆணையர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையர்கள் தலைமையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இதில் போலீசாருக்கு உதவியாக ஊர்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் நாளை இரவு முதல் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் வரை 350 தேவாலயங்களுக்கு சுழற்சிமுறையில் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீசார் சாதாரண உடையில் சென்று கண்காணித்து திருட்டு, ஈவ்டீசிங் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முக்கியமான தேவாலயங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும் சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பில் போலீசார் ஈடுபடுவார்கள்' என்று அவர் கூறியுள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
16 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
16 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
16 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago