Skip to main content

இந்தியாவின் முன்னாள் பிரதமர் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

Dec 20, 2023 23 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவின் முன்னாள் பிரதமர் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு. 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான முருகனை பிரித்தானியாவுக்கு நாடு கடத்த முடியாது என இந்திய மத்திய அரசாங்கம், சென்னை மேல்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.



எனினும் அவரை அவரது தாய்நாடான இலங்கைக்கு நாடு கடத்த முடியும் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.



இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்ட முருகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை மேல் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் இந்த விடயத்தை எடுத்துரைத்துள்ளார்.



இந்தியாவிலிருந்து வெளியேறி பிரித்தானியாவிற்கு செல்வதற்கான பயண ஆவணங்களை முருகன் கோருகிறார்.ஆனால் அத்தகைய அனுமதி அல்லது வெளியேற உத்தரவை வழங்க முடியாது என இந்திய மத்திய அரசாங்கம், சென்னை மேல்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.



மேலும் இலங்கை உயர்ஸ்தானிகரகத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அவரது ஆவணங்களை அனுப்பியுள்ளது எனவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.



இந் நிலையில் இலங்கை உயர்ஸ்தானிகரகம், மனுதாரருக்கு கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணங்களை வழங்கினால் மட்டுமே, இந்திய வெளியுறவு அமைச்சு அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



தற்போது திருச்சியில் உள்ள வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு முகாமில் முருகன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை