Skip to main content

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

Dec 17, 2023 22 views Posted By : YarlSri TV
Image

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு! 

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட சேதத்திற்கு 500 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பாக சாட்சியமளிப்பதற்காக லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது .



இந்நிலையில், லிட்ரோ நிறுவனத்தை ஜனவரி 5 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட நீதிபதி கே.வி.எம்.பி. டி சில்வா உத்தரவுபிறப்பித்துள்ளார்.



கடவத்தை மஹர தலுபிட்டிய வீதியில் வசிக்கும் எஸ்.ஏ. டிஸ்னா ஷிராணியின் சட்டத்தரணி ஜயமுதித ஜயசூரியவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைபாட்டின் அடிப்படையிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



அதன்போது, எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் தனது குடும்பத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து ஆதரவற்ற நிலைக்கு ஆளான போதும், பிரதிவாதி நிறுவனம் தனது குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் வழங்கவில்லை என அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.   .மேலும் அவரது முறைப்பாட்டில், சட்டத்தரணி ஜெயமுதிதா ஜெயசூர்யா, “தனது குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட இழப்புக்காக தனது குடும்பத்திற்கு 14 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஒக்டோபர் 20 ஆம் தேதி பிரதிவாதி நிறுவனத்திற்கு இடைக்கால கடிதம் அனுப்பினார், ஆனால் இதுவரை நிறுவனம் பதிலளிக்கவில்லை” என அவர் 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

18 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

18 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

18 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை