புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததாக மாவீரர் நினைவு நாளில் தமிழர்கள் கைது!
Dec 16, 2023 29 views Posted By : YarlSri TV
புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததாக மாவீரர் நினைவு நாளில் தமிழர்கள் கைது!
கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற மாவீரர் நினைவு நாளின் போது கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
பெண் ஒருவர் உள்ளிட்ட 11 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த அனைவரையும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நேரில் சென்று பார்வையிட்டார். அத்துடன், சிறைச்சாலை ஆணையாளருடனும் கலந்துரையாடியிருந்தார்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“ஜனாதிபதி மீது உயர்மட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இருக்கின்றது. இதன் காரணமாக அவர்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த முரண்பாடுகளை வைத்து மக்களை வதைக்கும் நிலையேற்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 06ஆம் திகதி உயர்தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர் ஒருவரும் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்தேன். இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளருடனும் பேசியுள்ளேன்.
கடந்த வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு தினத்தன்று நானும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசியிருந்தோம்.
குறிப்பாக மயிலத்தடு பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம், அத்துடன் பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம்.
எனினும், இது அரசாங்கத்தின் நிலைப்பாடு இல்லையென ஜனாதிபதி எங்களிடம் கூறியிருந்தார். இது பொலிஸாரின் தவறான செயற்பாடாக இருக்கலாம் எனவும் ஜனாதிபதி கூறியதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago