மக்களிடம் விளாடிமிர் புடின் மன்னிப்பு கோரினார்!
Dec 15, 2023 30 views Posted By : YarlSri TV
மக்களிடம் விளாடிமிர் புடின் மன்னிப்பு கோரினார்!
ரஷ்யாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஆண்டின் தொடக்கத்தில் இருந்த முட்டை விலை இப்போது 40 வீதம் அதிகரித்துள்ளதாகவும், இது அரசாங்கத்தின் தோல்வி எனவும் அவர் கூறியுள்ளார்.
“இதற்காக தான் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும், அரசாங்கத்தின் பணியில் ஏற்பட்ட தோல்வியே இதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்களுக்கான ஆண்டு இறுதி உரையின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது "சிறப்பு இராணுவ நடவடிக்கையை" தொடங்கியதைத் தொடர்ந்து மேற்கத்திய வர்த்தகக் கட்டுப்பாடுகளால் உள்நாட்டில் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது.
ரஷ்ய புள்ளிவிவர நிறுவனமான ரோஸ்ஸ்டாட்டின் கூற்றுப்படி, அக்டோபர் 2023 இல் முட்டைகளின் விலை 13 வீதத்தாலும், நவம்பரில் 15 வீதத்தாலும் அதிகரித்துள்ளது.
அதாவது நவம்பர் மாதத்தில் சராசரியாக ஒரு டஜன் முட்டைகளின் விலை சுமார் 130 ரூபிள் (சுமார் $1.8) ஆக இருந்துள்ளது.
உலகளாவிய முட்டை விலையை கண்காணிக்கும் டச்சு வங்கியான ரபோபேங்கின் கூற்றுப்படி, 2022இல் ரஷ்யா 1.2 பில்லியன் முட்டைகளை ஏற்றுமதி செய்தது, இது உலக சந்தையில் 15 வீதம் ஆகும்.
எவ்வாறாயினும், ஜனவரி 2023 இல் போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக ரஷ்யா தனது முட்டைகளை ஏற்றுமதி செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டதாக கூறப்படுகின்றது.
மேலும் போர் காரணமாக உள்நாட்டு முட்டை உற்பத்தியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன், போதிய அளவு உற்பத்திகளையும் செய்யமுடியவில்லை.
நாட்டில் தேவைகள் அதிகரித்துள்ள போதிலும், உற்பத்தி உயரவில்லை என புடின் தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடி விரைவில் சரிசெய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, 2024ஆம் ஆண்டு முதல் பாதியில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் மீதான வரியை குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது நுகர்வோருக்கு செலவை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago