Skip to main content

இலங்கையில் சதிவலை பின்னும் இந்தியா! சாவுமணியாக மாறும் என எச்சரிக்கை..

Jan 30, 2022 66 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் சதிவலை பின்னும் இந்தியா! சாவுமணியாக மாறும் என எச்சரிக்கை.. 

இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன், வடக்கு கிழக்கு தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதி வலையை இந்தியா பின்னுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.



இதன் அடிப்படையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தயாரிக்கப்படும் புதிய அரசியலமைப்பானது, ஒரு சில மாதங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் (Tharmalingam Suresh) சுட்டிக்காட்டியுள்ளார்.



மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் வீதியிலுள்ள கட்சியின் மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் கருத்து வெளியிட்ட அவர்,



“இன்று சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக கோட்டாபய அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்காக திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கின்றனர். அது முற்று முழுதாக சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாகவே நடைபெற்றுக் கொண்டிக்கின்றது.



இந்த நிலையிலே ஒரு சில மாதங்களில் அந்த அரசியல் யாப்பை முன்வைப்பதற்காக ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை