Skip to main content

உடனடி விசாரணை வேண்டும் - Sajith Premedhassa

Dec 10, 2023 28 views Posted By : YarlSri TV
Image

உடனடி விசாரணை வேண்டும் - Sajith Premedhassa 

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மின்சாரத்திற்காக அதிக பணம் செலவழிக்கும் நாட்டில் பாதுகாப்பின்மைக்கு காரணம் என்ன என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



இந்நாட்டிற்கு உகந்த மின்சார கட்டமைப்பு தேவை. மின்சார சபை மறுசீரமைப்பின் போது அதனை தனியாருக்கு மாற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டில் பேரழிவு நிலை உருவாகலாம்.



நேற்று (09) ஒரு மின்கடத்தி பழுதடைந்ததன் காரணமாக முழு நாட்டின் மின்சார கட்டமைப்பும் எவ்வாறு தடைபட்டது என்பது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை தேவை. இந்த மின்சாரத் தடையின் ஊடாக நேற்றைய தினம் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து துல்லியமான பகுப்பாய்வு நடத்தப்பட வேண்டும்.



மீண்டும் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் நாட்டுக்கு ஏற்படக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை