Skip to main content

தேசிய கல்வி- கல்விசாரா கொள்கையைத் தயாரிக்க முன்மொழிவு!

Nov 30, 2023 33 views Posted By : YarlSri TV
Image

தேசிய கல்வி- கல்விசாரா கொள்கையைத் தயாரிக்க முன்மொழிவு! 

அரச மாகாணப் பாடசாலைகள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும், கல்வித்துறையில் பணிபுரியும் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் அனைத்துப் பணிகளான ஊழியர் இடமாற்றம் போன்றவற்றுக்கும் பொதுவான தேசிய கல்வி-கல்வி சாரா ஊழியர் கொள்கையைத் தயாரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.



ஊழியர் சம்பளம், விடுமுறைகள், ஒழுக்காற்று விசாரணைகள் என்பன அந்தக் கொள்கையின் அடிப்படையாகும்.



அது அரச சேவை அரசியலமைப்பின் ஊடாக அமுல்படுத்தப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.



கல்வி-கல்வி சாரா ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்வி அமைச்சர் தலைமையில் கொழும்பு பொது ஊடக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கல்வி கல்வி சாரா ஊழியர் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,



நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான இடமாற்ற சபைகள் இயங்கி வருவதாகவும், கல்வி அமைச்சிலும் இடமாற்ற சபை அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் .



மேலும், ஊழியர் இடமாற்றம், விடுப்புகளில் ஒருமித்த தன்மை பேணப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.



ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்வது போன்றவை உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.



வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்து 10,126 பாடசாலைக் குழுமங்களும், பௌதீக மற்றும் மனித வளங்களை நிர்வகிப்பதற்கு வசதியாக, கிட்டத்தட்ட 1,200 பாடசாலைகளாகப் பிரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதனால் பாடசாலைகள் மிகவும் பயனுள்ள, தரமான மற்றும் வினைத்திறன் வாய்ந்த சேவையைப் பெற முடியும், முடிந்தவரை மறுசீரமைப்பு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.



கல்வி அமைச்சர் என்ற ரீதியில் கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வதை விட கல்வித்துறையில் தொழில்சார் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளதாகவும், மாகாண மட்டத்தில் பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பின்னணி உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



அவர் அண்மையில் அனைத்து மாகாண அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுடன் கலந்துரையாடினார். எதிர்காலத்தில் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தமது மாகாணத்தினுள் மிக இலகுவாக தீர்வு காணப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை