பெண் செய்தியாளர் கொலை வழக்கு!
Nov 26, 2023 27 views Posted By : YarlSri TV
பெண் செய்தியாளர் கொலை வழக்கு!
தொலைக்காட்சி செய்தியாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனையை டெல்லி நீதிமன்றம் விதித்துள்ளது.
டெல்லியில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சௌமியா விஸ்வநாதன் பணியாற்றினார். கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி அதிகாலை அவர் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ரவி கபூா், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய் குமாா், அஜய் சேத்தி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மரண தண்டனை கோரிக்கையை நிராகரித்த கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ரவீந்திர குமாா், அஜய் சேத்தியை தவிர மீதமுள்ள குற்றவாளிகள் நாள்வருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். அஜய் சேத்திக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக 15 ஆண்டுகள் காத்திருந்ததாக சௌமியாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago