டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடுவதாக அறிக்கை!...
Nov 24, 2023 32 views Posted By : YarlSri TV
டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடுவதாக அறிக்கை!...
இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான சவால்கள் காரணமாக டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.
டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது அந்த தூதரகத்தை மூடப்போவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான சவால்கள் காரணமாக டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாகவும்,
இந்த நடவடிக்கை நவம்பர் 23 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தூதரகத்தின் நடவடிக்கை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அரசின் நிலைப்பாடு மாறி, பணிகளைச் சாதாரணமாக செய்யும் அளவுக்கு நிலைமை இயல்பானதாக மாறும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகும் அறிக்கையில் உள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை எதற்காக எடுக்கபட்டது என்றும் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர். அதில் உள் முரண்பாடு மற்றும் தூதர்கள் தாலிபன்களுக்கு ஆதரவாக மாறிவிட்டார்கள் என்று சில முத்திரைக் குத்த முயற்சிக்கலாம் ஆனால் இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க கொள்கைகள் மற்றும் நலன்களின் பரந்த மாற்றங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களின் பணிக்காலம் முழுவதும், இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் மக்கள் வழங்கிய ஆதரவுக்கும் புரிதலுக்கும் தூதரகத்தின் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர். வளங்கள் மற்றும் அதிகாரத்தில் வரம்புகள் இருந்த நிலையில் காபூலில் ஒரு நிலையான அரசாங்கம் இல்லாத போதிலும் தூதரகம் மக்களின் நலன்களுக்காக செயல்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு , நவம்பர் 1 ஆம் தேதி முதல், இந்தியாவுடனான அனைத்து தூதரக நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருந்தது. அதில், ஆழ்ந்த வருத்தத்துடனும், சோகத்துடனும், ஏமாற்றத்துடனும் புதுடெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் அதன் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்துவதாக கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago