Skip to main content

மயிலாடுதுறை மீனவர் மீது கடற்படை துப்பாக்கிச்சூடு - பரபரப்பு சம்பவம்!

Oct 21, 2022 72 views Posted By : YarlSri TV
Image

மயிலாடுதுறை மீனவர் மீது கடற்படை துப்பாக்கிச்சூடு - பரபரப்பு சம்பவம்!  

மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். 



இராமநாதபுரம் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மயிலாடுதுறையை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். 



அப்போது அங்கு வந்த இந்திய கடற்படை வீரர்கள் படகை நிறுத்த கோரி எச்சரித்துள்ளனர். ஆனால் மீனவர்கள் படகை நிறுத்தாமல் சென்றுள்ளனர். 



இதனால் பாதுகாப்பு கருதி கடற்படை வீரர்கள் விசைப்படை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதில் விசைப்படகில் இருந்த வீரவேல் என்ற மீனவருக்கு வயிறு, தொடை பகுதியில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். 



இவர்கள் மயிலாடுதுறை மீனவர்கள் என்பதை அறிந்த கடற்படை வீரர்கள் காயம் அடைந்தவரை மீட்டு வீமான படைவீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் குண்டடிப்பட்ட மீனவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் விமானபடை வீரர்கள் அனுமதித்தனர். 



அவருக்கு டாக்கடர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். தற்போது வரை அவர் மயக்கத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

7 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

7 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

7 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

7 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

7 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை