Skip to main content

8 பேருக்கு மரண தண்டனை :மேல்முறையீட்டு மனு ஏற்பு!...

Nov 24, 2023 25 views Posted By : YarlSri TV
Image

8 பேருக்கு மரண தண்டனை :மேல்முறையீட்டு மனு ஏற்பு!... 

உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், கத்தாரில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் எட்டு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது.



இந்திய கடற்படையில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற எட்டு அதிகாரிகள், மேற்காசிய நாடான கத்தாரில் உள்ள, ‘தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்டு கன்சல்டன்சி சர்வீசஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேர், இஸ்ரேலுக்கு ஆதரவாக கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



அவர்களின் ஜாமின் மனு பல்வேறு முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேருக்கும் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களை விடுவிக்க சட்ட பூர்வ வழிமுறைகளில் தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.



இந்நிலையில், இந்தியர்கள் 8 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, கத்தார் நீதிமன்றத்தில் இந்தியா அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் ஏற்றுக் கொண்டுள்ளது. இது குறித்த அடுத்த கட்ட விசாரணைக்கு கத்தார் நீதிமன்றம் விரைவில் தேதி நிர்ணயிக்கும் என தெரிய வந்துள்ளது.



இதனால் 8 அதிகாரிகளின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை