பிரளய்’ ஏவுகணை சோதனை வெற்றி!...
Nov 08, 2023 25 views Posted By : YarlSri TV
பிரளய்’ ஏவுகணை சோதனை வெற்றி!...
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் (டி.ஆர்.டி.ஓ.), நாட்டின் பாதுகாப்பு தேவைகளுக்காக ஏவுகணைகள், வெடிகுண்டுகள், ரேடார்கள், மின்னணு சாதனங்கள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது. அந்த வகையில் ‘பிரளய்’ என்ற ஏவுகணையைத் தயாரித்துள்ளது.
இந்த ஏவுகணை, தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள மற்றொரு இலக்கைத் தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் இரக ஏவுகணை ஆகும். இது ‘பிரித்வி’ ஏவுகணையை முன்மாதிரியாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட திட எரிபொருள் ஏவுகணை ஆகும்.
இந்த ஏவுகணை 350 கிலோ மீட்டர் முதல் 500 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள, எதிரிகளின் இலக்கைத் தாக்கி அழிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை உள்ள ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கவல்லது.
இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பாலசோர் கடலோரத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவில் ‘பிரளய்’ ஏவுகணை சோதனை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை அதன் இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழித்தது. ஏவுகணை சென்ற பாதையைச் சாதனங்கள் துல்லியமாகக் கண்காணித்தன. திட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் ஏவுகணை பூர்த்தி செய்துள்ளது.
வரும் காலங்களில் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் அருகே பாதுகாப்பிற்காக இந்த ஏவுகணைகள் நிறுத்தி வைக்கப்படும். இந்தியாவின் பிரளய் ஏவுகணை, சீன இராணுவத்தின் வசம் இருக்கும், ‘டாங் பெங் 12’ மற்றும் தற்போது உக்ரைன் போரில் இரஷ்யா பயன்படுத்தி வரும், ‘ஸ்கான்டர்’ ஏவுகணை ஆகியவற்றுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
24 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
24 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
24 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
24 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
24 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
24 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago