Skip to main content

இலங்கையர்களை நாடுகடத்திய குவைத் அரசு...

Nov 08, 2023 31 views Posted By : YarlSri TV
Image

இலங்கையர்களை நாடுகடத்திய குவைத் அரசு... 

வீசா இல்லாமல்  குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பணிபுரிந்து வந்த இலங்கையை சேர்ந்த  26 பேர், இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் கீழ் குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.



குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்துள்ள 2000க்கும் மேற்பட்ட  பணியாளர்களில் உள்ளடங்கியுள்ள  இந்தக் குழு இலங்கை வருவதோடு, எஞ்சிய பணியாளர்களும் பகுதி பகுதியாக  இலங்கைக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தூதரகத்தின் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் குவைத் நாட்டின் குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதித்துறை மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றிய இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள், இந்த வீட்டுப் பணியாளர்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்று, அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை ரத்து செய்துள்ளனர்.



மேலும், விமானப் பயணச்சீட்டு இல்லாத நிலையிலிருந்த  இந்த பணியாளர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்கு குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை