லடாக்கில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் - சீன ராணுவம்
Apr 12, 2021 163 views Posted By : YarlSri TV
லடாக்கில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் - சீன ராணுவம்
கிழக்கு லடாக்கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இந்தியாவும், சீனாவும் படைகளை விலக்கியுள்ளன. அங்கு மீதமுள்ள இடங்களிலும் படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக கடந்த 9-ந் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் சந்தித்து பேசினர்.
இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த இந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தையில் கோக்ரா, தேப்சாங், ஹாட்ஸ்பிரிங் போன்ற பகுதிகளில் இருந்தும் படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக இரு தரப்பும் விரிவாக பேசியதாக இந்திய ராணுவம் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.
அங்கு மேற்கொண்டு எந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தாமல், தற்போதைய நிலைத்தன்மையை கூட்டாக பராமரிப்பது என்றும், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை வேகப்படுத்த இருதரப்பும் ஒப்புக்கெண்டதாகவும் அதில் கூறியிருந்தது.
இந்த நிலையில் எல்லையில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் எனவும், அங்கு அமைதியை பராமரிக்க வேண்டும் எனவும் சீன ராணுவம் கூறியுள்ளது. முந்தைய பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட ஒருமித்த முடிவை இருதரப்பும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அந்த நாடு கூறியுள்ளது.
சமீபத்திய பேச்சுவார்த்தை தொடர்பாக சீன ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் முந்தைய பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவுகளின்படி, எல்லையில் பதற்றத்தணிப்பு தொடர்பான தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்று, எல்லைப்பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம். அத்துடன் எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்கும் சீனாவின் இலக்கை நோக்கி நகர்வார்கள் எனவும் எதிர்பார்க்கிறோம்’ என்று கூறப்பட்டு இருந்தது.
இருநாட்டு ராணுவத்துக்கு இடையே நடந்துள்ள 11-வது சுற்று பேச்சுவார்த்தை சுமார் 13 மணி நேரம் நீடித்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏனெனில் சீன அதிகாரிகள் முன்கூட்டியே திட்டமிட்ட மனநிலையிலேயே கலந்து கொண்டதாகவும், எந்த வகையிலான நெகிழ்வுத்தன்மையையும் அவர்கள் காட்டவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago