ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!...
Nov 06, 2023 32 views Posted By : YarlSri TV
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!...
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க தமிழக அரசு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்த நிலையில், இம்மாதம் 19 அல்லது 26 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் அனுமதி வழங்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு விஜயதசமியை முன்னிட்டு, தமிழகத்தில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அனுமதி கோரியது. ஆனால், இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதில், உச்ச நீதிமன்றமும் சில நிபந்தனைகளுடன் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தது. இதன் பிறகு தமிழகம் முழுவதும் ஊர்வலம் நடந்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு, தமிழகத்தில் அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 33 இடங்களில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே விதித்த நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்தலாம் என்று கடந்த அக்டோபர் 16-ம் தேதி அனுமதி வழங்கியது.
ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரணி எங்கு தொடங்கி எங்கு முடியும் என்பது குறித்த தகவல்களை வரும் 9-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி,. நவம்பர் 19 அல்லது 26 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார் .
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago