ஸ்டாலின் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்!...
Nov 06, 2023 23 views Posted By : YarlSri TV
ஸ்டாலின் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்!...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத ஒருவர், முதல்வர் ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு உள்ளிட்ட 7 இடங்களில் வெடி குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துவிட்டு, போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறை அதிகாரிகள், உடனடியாக, முதல்வர் ஸ்டாலினின் தேனாம்பேட்டை இல்லம் உள்ளிட்ட 7 இடங்களில் வெடி குண்டு கண்டறியும் நிபுணர்களை வரவழைத்து அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். இதில், அந்த தகவல் புரளி எனத் தெரிய வந்தது.
இதனையடுத்து, அந்த தொலைப்பேசி எண்ணை வைத்து, மிரட்டல் விடுத்த நபர் யார் என்று தீவிர விசாரணையில் இறங்கினர். இதில், நீலகிரியைச் சேர்ந்த கணேசன் என்பவர்தான் முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே, மதுபோதையில் முதல்வரின் வீட்டிற்குக் கன்னியாகுமரியைச் சேர்ந்த இசக்கிமுத்து வெடி குண்டு மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago