Skip to main content

தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருளின் விலை..! மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Nov 06, 2023 32 views Posted By : YarlSri TV
Image

தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருளின் விலை..! மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி 

2024ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் எரிவாயுவின் விலை தொடர்ந்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக  லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.



குளிர் காலநிலை காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கும் எனவும்  அதன் பின்னர் காலநிலை மாற்றமடையும் போது எரிவாயுவின் விலையை  குறைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதெனவும் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.



லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக தேநீர், பால் தேநீர் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை