பிள்ளையானுக்கு இன்று இடம் பெற்ற பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு!
Sep 27, 2020 266 views Posted By : YarlSri TV
பிள்ளையானுக்கு இன்று இடம் பெற்ற பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு!
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு ஓருங்கிணைப்பு தலைவராக நியமனம் பெற்றுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு மயிலங்கரச்சை வாழ் மக்களால் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவிக்கும் நிகழ்வு நாவலடி மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் இன்று இடம்பெற்றது.
இந்த வாரம் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள சென்ற வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிடமாகவிருந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு ஓருங்கிணைப்பு தலைவர் பதவி வெற்றிடத்திற்கு நியமனக் கடிதத்தை பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு தரை வழியாக மீண்டும் அழைத்து வரப்பட்ட வேளை மயிலங்கரச்சையில் ஒன்று கூடி காத்திருந்த மக்களால் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
வழியில் காத்திருந்த மக்கள் பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் சென்றவாறு தமது கைகளை அசைத்து மக்களுக்கு நன்றி தெரிவித்து சென்று கொண்டிருந்தார்.
இதேவேளை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்; பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனை வரவேற்கும் முகமாக பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1466 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1466 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1466 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1466 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1467 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1467 Days ago