Skip to main content

இரவு நடந்த விபரீதம்! வெளிநாட்டவர்கள் உட்பட இருவர் பாதிப்பு

Mar 31, 2023 60 views Posted By : YarlSri TV
Image

இரவு நடந்த விபரீதம்! வெளிநாட்டவர்கள் உட்பட இருவர் பாதிப்பு 

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு ரஷ்ய பிரஜைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.



மாத்தறை – கடவத்தை பகுதியில் இருந்து பயணித்த லொறி ஒன்றும், குறித்த குழுவினர் பயணித்த வேனும் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.



விபத்தில் காயமடைந்த வேன் சாரதி 25 வயதுடையவர் மற்றும் 59 வயதுடைய ரஷ்ய ஆண் ஒருவரும் ரஷ்ய பெண் ஒருவரும் விபத்தில் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



விபத்து தொடர்பான விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை