அமெரிக்கா ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.இதனால் போர்ப்பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
May 21, 2020 298 views Posted By : YarlSri TV
அமெரிக்கா ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.இதனால் போர்ப்பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் மீண்டும் போர்ச் சூழல் ஏற்பட்டு வந்த நிலையில், இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கிய போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது.
அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க இராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வலுத்து வந்தது.
இந்த நிலையில் வளைகுடா பகுதியில் கடந்த மாதம் 11 ஈரானிய கப்பல்கள் அமெரிக்க கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்களுக்கு அருகில் வந்தது. இதை தொடர்ந்து அச்சுறுத்தும் விதமாக ஈரானியக் கப்பல்கள் நடந்து கொண்டால் அவற்றை அழித்துவிடுங்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்கக் கடற்படைகளுக்கு உத்தரவிட்டார்.
அவ்வாறு தாக்குதல் நடத்தினால், வளைகுடா பகுதியில் இருக்கும் அமெரிக்கக் கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் என்று ஈரான் மேஜர் ஜெனரல் ஹூசைன் சலாமி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
சமீபத்திலும் அமெரிக்கா ஈரானுக்கு மிரட்டல் விடுத்திருந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி வளைகுடா பகுதியில் ஈரான் தனது வழக்கமான கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஈரானிய இராணுவ அதிகாரி கூறுகையில், கடந்த காலங்களைப் போல சர்வதேச கடற்படை விதிகளுக்கு உட்பட்டு ஈரான் வளைகுடா பகுதியில் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா அமெரிக்க போர்க்கப்பல்களிலிருந்து 100 மீட்டர் (109 கெஜம்) தொலைவில் இருக்குமாறு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தது அல்லது ஆபத்து "அச்சுறுத்தலாக விளக்கப்பட்டு சட்டபூர்வமான தற்காப்பு நடவடிக்கைகளுக்கு உட்படும் என கூறி உள்ளது
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago