Skip to main content

இலங்கையில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகிய பாடசாலை மாணவர்கள்!!

Mar 08, 2023 66 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகிய பாடசாலை மாணவர்கள்!! 

கொழும்பில் இன்று இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகையை சுவாசித்ததில் பல பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் நேற்றைய தினம் (07) நடத்திய போராட்டத்தை கலைப்பதற்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை கண்டித்து, கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளது.



இன்றும் போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.



எவ்வாறாயினும், கொழும்பு கேம்பிரிட்ஜ் பிளேஸுக்கு அருகில் பொலிஸாரின் கண்ணீர்ப்புகைத் தாக்குதலுக்கு பல இளம் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இருமல் மற்றும் கடுமையான அசௌகரியத்திற்கு மத்தியில் மாணவர்கள் இருந்ததை அவதானிக்க முடிந்தது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை