Skip to main content

பிச்சை எடுக்கின்றார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி

Mar 27, 2023 74 views Posted By : YarlSri TV
Image

பிச்சை எடுக்கின்றார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி 



நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தாம் செலுத்த வேண்டிய தண்டப்பணத்தை திரட்ட உங்களால் முடிந்தளவு பணத்தைக் கொடுத்து உதவுங்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் உயர் நீதிமன்றம் 100 மில்லியன் ரூபாய் பணத்தை ஆறு மாதங்களில் செலுத்த எனக்கு அவகாசம் கொடுத்தது. அதில் மூன்று மாதங்கள் கடந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.



“நான் கொள்ளையடிக்கவோ குண்டு வீசவோ இல்லை. ஆனாலும் எனது அரசாங்கத்தில் இருந்த சில அதிகாரிகள் தமது பொறுப்புகளை சரியாகக் கவனிக்காததால் நான் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது” என அவர்  தெரிவித்தார்.



பணத்தை செலுத்த தவறினால் நான் சிறைக்குச் செல்ல நேரிடுமா  இல்லையென்றால் வேறு ஏதேனும் தீர்ப்பு விதிக்கப்படுமா என்பது எனக்குத் தெரியவில்லை என்று தெரிவித்தார். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை