Skip to main content

இலங்கையில் நால்வருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவு

Sep 12, 2023 40 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் நால்வருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவு 

இலங்கையில் நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து களுத்துறை மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.





கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி நபரொருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நால்வரை குற்றவாளிகளாக அறிவித்தே மரணதண்டனை வழங்கி களுத்துறை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 



1996 ஆம் ஆண்டு தை மாதம் 02 ஆம் திகதி களுத்துறை மதினகந்த என்ற இடத்தில்  கூரிய ஆயுதங்களால்  தாக்கி நபரொருவரை கொலை செய்தமை மற்றும்  ஒருவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தியமைக்காக சந்தேகநபர்கள் 07 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



 அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட  விசாரணைகளை தொடர்ந்து  நால்வரையும் குற்றவாளிகளாக அறிவித்து களுத்துறை மேல் நீதிமன்றத்தினால் அவர்களுக்கு நேற்று (11) மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை