Skip to main content

வங்கிக் கணக்கில் பிரச்சினை,மக்களுக்கு கிடைக்கவுள்ள பணம்

Sep 02, 2023 56 views Posted By : YarlSri TV
Image

வங்கிக் கணக்கில் பிரச்சினை,மக்களுக்கு கிடைக்கவுள்ள பணம்  

ஒருசிலரின் வங்கிக் கணக்குகளில் இருந்த பிரச்சினை காரணமாக அஸ்வெசும நிவாரணப் பணம் கிடைக்காமல் இருந்திருக்கிறது. இவ்வாறு சுமார்  2 இலட்சம்பேர் வரை இருக்கின்றனர். இவர்களுக்கான நிவாரண பணம் இந்த வாரத்துக்குள் கிடைக்கும் என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.



அத்துடன் அஸ்வெசும நிவாரண திட்டத்தில் 6இலட்சத்து 89ஆயிரத்து 803பேரின் வங்கி கணக்குகளுக்கு 4,395 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டிருக்கிறது



ஒருசிலரின் வங்கிக் கணக்குகளில் இருந்த பிரச்சினை காரணமாக அவர்களுக்கு இந்த நிவாரணம் பணம் கிடைக்காமல் இருந்திருக்கிறது. இவ்வாறு சுமார் 2இலட்சம்பேர் வரை இருக்கின்றனர் இவர்களுக்கான நிவாரண பணம் இந்த வாரத்துக்குள் கிடைக்கும். அத்துடன் அஸ்வெசும நிவாரண திட்டம் 24 இலட்சம் பேருக்கு வழங்க தீர்மானித்திருக்கிறோம். இதற்காக அரசாங்கம் 206 பில்லியன் ரூபா ஒதுக்கி இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை