மேற்கு கரையோரங்களில் இருந்து 14 கடலாமைகளின் உடல்கள் மீட்பு!
Aug 24, 2023 41 views Posted By : YarlSri TV
மேற்கு கரையோரங்களில் இருந்து 14 கடலாமைகளின் உடல்கள் மீட்பு!
கடந்த 48 மணித்தியாலங்களில் மேற்கு கடற்கரையில் 14 ஆமைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இந்த உயிரிழப்புகளுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
(22) , (23) ஆகிய திகதிகளில் வெள்ளவத்தையில் இருந்து காலி முகத்துவாரம் வரையான கரையோரத்திலும் நீர்கொழும்பு - சரக்குவ, பமுனுகம, கல்கிசை கரையோரங்களிலும் இறந்த நிலையில் கடல் ஆமைகள் மீட்கப்பட்டுள்னன.
வெள்ளவத்தை தொடக்கம் காலி முகத்துவாரம் வரையான கடற்கரையில் நேற்று முன்தினம் 7-க்கும் மேற்பட்ட ஆமைகளின் சடலங்கள் குவிந்திருந்தன.
நேற்று காலை நீர்கொழும்பு - சரக்குவ கடற்கரையில் உயிரிழந்த நிலையில் 05 கடலாமைகள் கரையொதுங்கின.
பமுனுகம கடற்கரையிலும் உயிரிழந்த நிலையில் இரண்டு கடலாமைகள் கரையொதுங்கியிருந்ததுடன், கல்கிசையில் மற்றுமொரு கடலாமையும் இறந்த நிலையில் கரையொதுங்கியது.
இந்நிலையில், கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினர்,
காலி முகத்திடலில் கரையொதுங்கிய 04 கடலாமைகளின் உடல்களையும் மன்றில் முன்வைத்தனர்.
பிரேத பரிசோதனையை நடத்தி, கடலாமைகளின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியுமாறும் அது தொடர்பில் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கோட்டை நீதவான் திலின கமகே கால்நடை வைத்தியருக்கு இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, 03 நாட்களாக சிலாபத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் கறுப்பு நிற எண்ணெய் படலம் மிதந்தமையை காண முடிந்தது.
இதனால் குறைந்தளவான மீன்களே கிடைத்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.
கடலாமைகள் கண்டெடுக்கப்பட்ட கடற்கரையிலிருந்து 20 கடல்மைல் தொலைவிலேயே தீப்பற்றிய XPress Pearl கப்பலின் சிதைவுகள் காணப்படுகின்றன.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
7 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago