Skip to main content

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை பலி! - யாழில் சம்பவம்.

Aug 23, 2023 37 views Posted By : YarlSri TV
Image

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை பலி! - யாழில் சம்பவம். 

நயினாதீவில் 5 நாட்கள் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பிறந்து 8 நாட்களே ஆன குழந்தை ஒன்று நேற்றையதினம் (22-08-2023) பரிதாபமாக உயிரிழந்துள்ளது.



காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்த குறித்த குழந்தை கடந்த 19ஆம் திகதி காலை நயினாதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக பிற்பகல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.



இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் காலை உயிரிழந்துள்ளது.



நயினாதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த மதிவதனன் சுதர்சாவிந் என்ற குழந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.



குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை