Skip to main content

கோவில்பட்டி அருகே ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பொதிகள் பறிமுதல் – 3 பேர் கைது.!

Aug 23, 2023 63 views Posted By : YarlSri TV
Image

கோவில்பட்டி அருகே ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பொதிகள் பறிமுதல் – 3 பேர் கைது.! 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு சுங்கச்சாவடி பகுதியில் புகையிலை மற்றும் கஞ்சா ஒழிப்பு தனிப்படை காவல்துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்னை பதிவு எண் கொண்ட மினி கண்டெயினர் லாரியை நிறுத்தி தனிப்படை காவல்துறையினர் சோதனை மேற்கொள்ள முயன்றனர்.



அப்போது ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணான தகவல் கூறியதை அடுத்து தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்ததில் அதில் ரகசிய அறை அமைத்து கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் பிடித்து கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடிக்கு கஞ்சாவினை கொண்டு செல்ல முற்பட்டது தெரிய வந்தது.அந்த மூவர் தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த (மத போதகர்) ஜான் அற்புத பாரத், பாண்டிச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியைச் சேர்ந்த சக்தி பாபு (39) (டிரைவர்) மற்றும் தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த விஜயகுமார் (36) உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.



மேலும் மினி கண்டெயினர் லாரியில் 300 பாக்கெட்டுகளில் கொண்டுவரப்பட்ட 600 கிலோ கஞ்சா மற்றும் லாரியையும் தனிப்படை பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.



மதுவிலக்கு டிஎஸ்பி சிவசுப்பு மற்றும் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர். கோவில்பட்டி பகுதியில் அதிக அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை