சுதந்திர தின கொண்டாட்டம் 200 போலீசார் பாதுகாப்பு பணி!
Aug 14, 2023 95 views Posted By : YarlSri TV
சுதந்திர தின கொண்டாட்டம் 200 போலீசார் பாதுகாப்பு பணி!
77-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரயில்வே எஸ்.பி. பொன்ராம் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்;
ரயில்வே போலீசாருடன் இணைந்து தமிழ்நாடு காவல்துறையின் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருவதாகவும், தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், ரயில் நிலையங்களை சுற்றி கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றன. நிறுத்தப்பட்டுள்ள ரயில்களின் அடிப்பகுதி ரிப்ளெக்டர் கண்ணாடி மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. மேலும், குமாரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago