Skip to main content

யாழ்ப்பாணத்தில் 69,000 இற்கும்  மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

Aug 11, 2023 55 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணத்தில் 69,000 இற்கும்  மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு 

சுமார் 100,000 பேர் நாட்டில் நிலவும் வறட்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.



30,862 குடும்பங்களைச் சேர்ந்த 99,594 பேர் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, இரத்தினபுரி, பதுளை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய  பகுதிகளில்  பாதிக்கப்பட்டுள்ளனர்.



யாழ்ப்பாணத்தில் வறட்சி



சங்கானை பிரதேசம் ஜூன் மாதத்திற்கு பிறகு  நிலவும் வறட்சியினால்  மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் 69,000 இற்கும் மேற்பட்ட நபர்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



   இதேவேளை, தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இலங்கையில் போதிய மழையை பெறவில்லை எனவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதிய மழை பெய்யாது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



'எல் நினோ விளைவு' காரணமாக இவ்வாறு மழை பெய்யாமல் இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை