Skip to main content

மகாராஷ்டிராவில் அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு

Apr 17, 2023 82 views Posted By : YarlSri TV
Image

மகாராஷ்டிராவில் அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு 

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று(16) இடம்பெற்ற விருது வழங்கல் விழாவில் கலந்துகொண்ட 11 பேர் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.



மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் நவி மும்பையில் பூஷண் விருது வழங்கும் விழா இடம்பெற்றது.



திறந்த வெளியில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.



விழாவில் அந்த மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணைத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.



குறித்த பகுதியில் நேற்று(16) அதிகபட்சமாக 38 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியிருந்தது.



இதன்போது அதிக வெப்பம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



எவ்வாறாயினும் இந்த சம்பவம் துர்திஷ்டவசமானது எனவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் எனவும் மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்..


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை