Skip to main content

மியன்மாரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம்!

Sep 21, 2022 72 views Posted By : YarlSri TV
Image

மியன்மாரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம்! 

மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



அக்கடிதத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து சென்றதும் பிறகு ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை செய்வதற்காக மியன்மாருக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



ஆனால் அந்த வேலையை செய்ய மறுப்பதால் அவர்கள் கடுமையாக தாக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது என்றும் 17 தமிழர்கள் மாநில அரசுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.



எனவே மியன்மார் நாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை