Skip to main content

யாழ்ப்பாணத்தில் அமைதி பேரணி!

Sep 21, 2022 68 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணத்தில் அமைதி பேரணி! 

உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.



யாழ்ப்பாணம் மாவட்ட மகளிர் அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறித்த அமைதிப் பேரணி யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து நெடுந்தூர பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.



இதன் போது பெண்கள் அமைப்பினர் பெண் பிரதிநிதிகள் மகளிர் அபிவிருத்தி குழுக்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



நாட்டிலே சாந்தி சமாதானத்தை நிலை நிறுத்துவதோடு நாடு அமைதியாக செயல்பட அனைவரும் நல்லிணக்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.



இதன் போது சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் இன ஒற்றுமையும் வலியுறுத்திய பதாதைகளைத் தாங்கியவாறு பெண்கள் யாழ்ப்பாண வீதியின் ஊடாக அமைதிப் பேரணியாக வலம் வந்தனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை