Skip to main content

யாழில் வீதியில் நடச்துசென்றவரை கத்தியால் வெட்டி பணம், நகை கொள்ளை!

Sep 20, 2022 71 views Posted By : YarlSri TV
Image

யாழில் வீதியில் நடச்துசென்றவரை கத்தியால் வெட்டி பணம், நகை கொள்ளை! 

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் கத்தியினால் வெட்டிக்காயப்படுத்திய பின்னர் நகையையும் பணத்தினையும் கொள்ளையடித்து சென்றுள்ளார். 



சங்கானை பகுதியில் உள்ள வங்கி ஒன்றுக்கு சென்று விட்டு  தனது வீடு நோக்கி குறித்த நபர் நடந்து சென்று கொண்டிருந்த வேளை  அவரை பின் தொடர்ந்து துவிச்சக்கர வண்டியில் வந்தவர் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் இடை மறித்து  கத்தியால் வெட்டி காயப்படுத்திய பின்னர் அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுண் தங்க சங்கிலி மற்றும் அவரிடம் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து துவிச்சக்கர வண்டியில் தப்பி சென்றுள்ளார். 



சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்னர். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை