Skip to main content

குருந்தூர் மலை பகுதியில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு!

Sep 17, 2022 63 views Posted By : YarlSri TV
Image

குருந்தூர் மலை பகுதியில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு! 

குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் சுவீகரிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதனை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்  அப்பகுதிக்கு நேற்று  விஜயம் செய்து தொல்பொருள் திணைக்களத்தினர் சுவீகரித்துள்ள காணிகளைப் பார்வையிட்டுள்ளார்.



இதன்போது உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை தொடர்பு கொண்ட சார்ள்ஸ் எம்.பி. புதிதாக தொல்பொருள் திணைக்களத்தினர் மக்களின் விவசாய நிலங்களை சுவீகரித்துள்ளனர் எனவும் இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியப்படுத்தியுள்ளார்.



இது தொட‌ர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் உடனடியாக விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை