Skip to main content

சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக் காலம் நிறைவு !

Oct 23, 2022 63 views Posted By : YarlSri TV
Image

சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக் காலம் நிறைவு ! 

22 ஆவது திருத்தும் அமுலாகியுள்ள நிலையில் தற்போது இயங்கி வரும் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக் காலம் முடிவடையும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என நம்புவதாக விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.



அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து 2 வார காலத்திற்குள் ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.



தேசிய தேர்தல் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, தேசிய கணக்காய்வு ஆணைக்குழு, பொது சேவை ஆணைக்குழு உள்ளிட்ட ஆணைக்குழுக்கள் இதில் அடங்கும்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை