Skip to main content

மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார்

Oct 21, 2022 60 views Posted By : YarlSri TV
Image

மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார் 

மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா விருது பெற்ற தெளிவத்தை ஜோசப் காலமானார்.



அவர் தனது 88ஆவது வயதில் இன்று  காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.



ஈழத்தின் சிறுகதையாளரும் நாவலாசிரியரும் இலக்கிய ஆய்வாளருமான இவர் இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவராக அறியப்பட்டவர்.



இவர் அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மிளிர்ந்து தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை