Skip to main content

மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!

Oct 05, 2022 60 views Posted By : YarlSri TV
Image

மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்! 

போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் செய்கின்றவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியும் மட்டக்களப்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.



ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சகல பாடசாலைகளிலும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கம் சமூக நலன்விரும்பிகளால் இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.



இந்த போராட்டத்தின் போது போதைப்பொருள் இல்லாதொழிப்புக்கான கோஷங்களை எழுப்பியும் வாசகங்களை ஏந்திய சுலோக அட்டைகளை தாங்கியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.



அத்துடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப்பணிப்பாளர் கீ.கமலமோகனதாசன் ஆகியோரிடம் மகஜர்களும் கையளிக்கப்பட்டன. இதேவேளை இதன்போது போதைப்பொருளுக்கு எதிரான வீதி நாடகமொன்றும் இடம்பெற்றது.



அண்மைய காலமாக மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் போதைப்பொருள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அச்சுறுத்தல்களை தொடர்ந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை