Skip to main content

கிளிநொச்சியில் புதிதாக அமையவுள்ள மதுபான நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பு!

Sep 30, 2022 83 views Posted By : YarlSri TV
Image

கிளிநொச்சியில் புதிதாக அமையவுள்ள மதுபான நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பு! 

கிளிநொச்சி கரடி போக்கு சந்தியை அண்மித்த பகுதியில் புதிதாக மதுபான விற்பனை நிலையத்திற்கான அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் அனுமதி வழங்கப்பட்ட பகுதியில் இடம்பெற்றது. இதன்போது குறித்த அனுமதியை இரத்து செய்யுமாறு பதாதைகளை ஏந்தி மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.



செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் குறித்த நிலையத்தினரால் ஒளிப்படம் எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



குறித்த மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள பகுதியானது பெண்கள் பாடசாலை அமைந்துள்ள பகுதி என்பதுடன் சிறுவர், பெண்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை