Skip to main content

அதிபர் புதினை அடுத்த வாரம் சந்திக்கிறார் ஐ.நா.பொது செயலாளர்!

Apr 23, 2022 76 views Posted By : YarlSri TV
Image

அதிபர் புதினை அடுத்த வாரம் சந்திக்கிறார் ஐ.நா.பொது செயலாளர்! 

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாகவும், குடிமக்கள் பலர் கொல்லப்படுவதாகவும் செய்தி வெளியானது.



இந்நிலையில், புச்சா படுகொலை குறித்த செய்தியை வாசித்த ஜப்பானிய செய்தி வாசிப்பாளர் யூமிகோ மட்சுவோ நேரலையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். சில நொடிகளில் சகஜ நிலைக்கு வந்த அவர், அதன்பின் செய்தி வாசிப்பை தொடர்ந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.



உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் இரு தரப்பிலும் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. 



உக்ரைன் நடத்திய பதில் தாக்குதலில் 21,200க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. 2,162 ராணுவ வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ரஷிய ராணுவத்தின் 83 பீரங்கிகள், 176 போர் விமானங்கள், 153 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.



ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் ஆண்டனிட்யோ குட்டரெஸ் அடுத்த வாரம் சந்திக்கிறார். இந்த சந்திப்பு ரஷியாவில் நடைபெற உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை