போர் பகுதிகளில் பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகள் இன்று நடைபெறாது: துணை பிரதமர்
Apr 22, 2022 62 views Posted By : YarlSri TV
போர் பகுதிகளில் பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகள் இன்று நடைபெறாது: துணை பிரதமர்
ரஷியா போர் தொடுத்துள்ள உக்ரைன் பகுதிகளில் பொதுமக்களை வெளியேற்றும் பணிகள் எதுவும் இன்று நடைபெறவில்லை என அந்நாட்டின் துணை பிரதமர் ஐரினா வெரிஷ்சக் தெரிவித்துள்ளார். போர் நடைபெறும் பகுதிகளில் சாலைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. இதனால் மீட்பு நடவடிக்கைகள் எதுவும் இன்று நடைபெறவில்லை என கூறியுள்ளார்
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரை ரஷியா கைப்பற்றியது. ரஷிய படைகள் கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். உக்ரைன் அரசாங்கத்திற்கு 800 மில்லியன் டாலர்களை ராணுவ உதவியாக வழங்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், மார்க் ஜுகர்பெர்க் உள்ளிட்ட 29 அமெரிக்கர்கள் தங்கள்து எல்லைக்குள் நுழைய பயண தடை விதித்துள்ளது ரஷியா.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago