கோட்டாபய வீடு போகும் வரை நாங்கள் ஓயமாட்டோம் போராட்டக்காரர்கள் ஆவேசம்!
Apr 11, 2022 109 views Posted By : YarlSri TV
கோட்டாபய வீடு போகும் வரை நாங்கள் ஓயமாட்டோம் போராட்டக்காரர்கள் ஆவேசம்!
கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்திடலில் மக்கள் ஆரம்பித்த மாபெரும் போராட்டம் இன்றும் தொடர்கின்றது.
ஏராளமான மக்களின் பங்குபற்றுதலுடன் மழைக்கு மத்தியிலும் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கோட்டா வீட்டுக்குப் போகும் வரை நாங்கள் வீட்டுக்குப் போகமாட்டோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக இரண்டு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு, குடிதண்ணீர் மற்றும் குடிபானங்களை வழங்கி வருகின்றனர்.
போராடும் மக்களுக்காக வைத்தியர்களும் இலவச வைத்திய சேவைகளை வழங்கி வருகின்றனர். அதேவேளை, போராட்டக்காரர்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் மெத்தைகள் மற்றும் நகரும் கழிப்பறைகள் வழங்கப்பட்டுள்ளன.
மூன்றாம் இணைப்பு
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் முடிவுறாது தற்போது வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போதும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பெருந்திரளானவர்கள் திரண்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எனினும் நேற்றைய தினத்தைப் போலவே குறித்த பகுதியில் இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளதாக களத்தில் இருக்கும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட அரசுக்கெதிரான போராட்டம் தற்போது வரை நடைபெற்று வருகின்றது.
கொட்டித் தீர்க்கும் மழையிலும் போராட்டக்காரர்கள் சளைக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது போராட்டத்தில் மேலும் பலர் இணைந்து கொண்டுள்ளதுடன் கோ ஹோம் கோட்டா என்ற கோஷம் பலமாக ஒலிக்கின்றது.
முதலாம் இணைப்பு
அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட அஹிம்சை ரீதியான போராட்டம் இன்று வரை தொடர்கின்றது.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டக் காரர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
23 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
23 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
23 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
23 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
23 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
23 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago