எல்லா விஷயங்களிலும் மோடி அரசு உறுதியுடன் செயல்பட்டது.. ஜே.பி. நட்டா
Apr 10, 2022 78 views Posted By : YarlSri TV
எல்லா விஷயங்களிலும் மோடி அரசு உறுதியுடன் செயல்பட்டது.. ஜே.பி. நட்டா
தடுப்பூசி, பாகிஸ்தானில் விமான தாக்குதல் என எல்லா விவகாரங்களிலும் மோடி அரசு உறுதியுடன் செயல்பட்டது என பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
இமாச்சல பிரதேசம் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் சொந்த மாநிலம். இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை பா.ஜ.க. இப்போதே தொடங்கி விட்டது. பா.ஜ.க.வின் தலைவர் ஜே.பி. நட்டா 4 நாள் பயணமாக நேற்று இமாச்சல பிரதேசம் சென்றார். முதல் நாளான நேற்று பொதுக்கூட்டம், சாலை பேரணியில் ஜே.பி. நட்டா பங்கேற்றார்.
சிம்லாவில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி. நட்டா பேசுகையில் கூறியதாவது: அண்மையில் முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் நாங்கள் (பா.ஜ.க.) நான் மாநிலங்களில் மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். இப்போது இது இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தின் முறை. ஹமிர்பூர் மற்றும் சம்பாவில் மருத்துவக் கல்லூரி திறக்கப்படும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? ஆனால் நாங்கள் அதை செய்தோம்.
பல கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டன. இது எளிதான வேலை அல்ல. பல்வேறு சமூக சேவை முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டதன் மூலம் அரசியல் கலாச்சாரத்தை பிரதமர் மோடி மாற்றியமைத்தார். ரூ.185 கோடி செலவில் இரட்டை டோஸ் தடுப்பூசி, பாகிஸ்தானில் விமான தாக்குதல்கள் அல்லது போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து 23 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது என எல்லா விவகாரங்களிலும் மோடி அரசு உறுதியுடன் செயல்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago